விபத்துகள் தடுக்கப்படுமா?

Update: 2024-06-16 12:52 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட திருமாந்துறையில் இருந்து லெப்பைக்குடிக்காடு, ஆடுதுறை, ஒகளூர், அத்தியூர் வழியே அகரம்சீகூர் செல்லும் முதன்மை சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு வகையான இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றனர். இதில் அவல நிலை என்னவெனில் கீழக்குடிக்காடூ, கழனிவாசல், ஆடுதுறை , ஒகளூர், அத்தியுர் ஆகிய ஊர்களில் சாலையில் பஸ் நிலையம் உள்ள பகுதியில் ஒரு வேகத்தடை கூட இல்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் அனைத்து இடங்களிலும் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை உள்ளன. இதனால் சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்