சேதமடைந்த சாலை

Update: 2024-06-09 10:30 GMT

சென்னை தண்டையார்பேட்டை , வி.ஓ.சி நகர் மாநகராட்சி பூங்கா அருகே சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. மேலும், அந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் கூடுதல் சிரமம் அடைகின்றனர். அந்தப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றவும், சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்