பசுமை பந்தல் சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-02 17:42 GMT

நாமக்கல் நகரில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. எனவே சிக்னலில் நின்று செல்லும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக பயணியர் மாளிகை முன்பு, அண்ணாசிலை அருகில், சேலம் சாலை, திருச்செங்கோடு சாலை ஆகிய இடங்களில் நகராட்சி சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது. இதில் அண்ணாசிலை முன்பு அமைக்கப்பட்ட பந்தல் கிழிந்து தொங்குகிறது. எனவே இந்த பசுமை பந்தல்களை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்