சேதமடைந்த சாலை

Update: 2024-06-02 13:41 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் பழவத்தான்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட காரைக்கால் சாலை விவேகானந்தா நகர், ராமகிருஷ்ணாநகர் பகுதி தெருக்களில் சாலை முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. இதனால் சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்