குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-02 12:08 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாட்டில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் தார் சாலையானது தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் அவசர தேவைக்கு இந்த சாலை வழியாக 108 ஆம்புலன்ஸ் வேகமாக செல்ல முடியாதநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்