பல்லாங்குழியான சாலை

Update: 2024-05-12 18:19 GMT
கடலூர் இம்பீரியல் சாலையில் இருந்து எஸ்.என்.சாவடி செல்லும் குறுக்கு சாலையில் வங்கி, திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. ஆனால் தற்போது இந்த சாலையானது பலத்த சேதமடைந்து பல்லாங்குழி போன்று காட்சி அளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே எனவே பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்