சாலையின் நடுவில் பள்ளம்

Update: 2024-05-12 13:59 GMT

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் சிட்கோ நகர் 4-வது பிரதான சாலையின் நடுவில் பள்ளம் உள்ளது. இந்த சாலை வழியே இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையின் நடுவில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்