சாலை விரிவாக்க பணியில் தொய்வு

Update: 2024-05-12 12:27 GMT

சாலை விரிவாக்க பணியில் தொய்வு

திருப்பூர் தாராபுரம் சாலை பிரிவில் இருந்து குளத்துப்பாளையம், சந்திராபுரம், செவந்தாம்பாளையம், முத்தனம் பாளையம் ஆகிய பகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். திருப்பூர் மாநகரில் தெற்கு பகுதியாக கருதப்படும் செவந்தாம்பாளையம் பகுதியில் சந்திராபுரம் பகுதியில் இருந்து முத்தனம்பாளையம் வரை சாலை இருபுறமும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் விரைந்து முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுவதால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலை துறையினர் விரைவாக பணிகளை முடிக்க வேண்டும்.

பாலசுப்பிரமணி,வீரபாண்டி.

98987 76753

மேலும் செய்திகள்