சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-05-05 17:28 GMT

சாலை சீரமைக்கப்படுமா?

 திருப்பூர் மாநகர பகுதியான 50 அடி சாலை, லட்சுமி நகர் பகுதியில் பல இடங்களில் பாதாள சாக்கடைக்கு இணைப்பு கொடுப்பதற்காக தோண்டிய பிறகு அவற்றை முறையாக மூடாமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவேசம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்க முன்வருவார்களா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-குமரன், திருப்பூர். 

மேலும் செய்திகள்