சேத்தியாத்தோப்பு அருகே ஆணைவாரி முதல் மதுவானைமேடு வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இ்ந்த சாலையை வாகன ஓட்டிகள் கடந்து செல்வதே பெரும் சவாலாக அவர்களுக்கு உள்ளது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.