வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-04-21 17:37 GMT

உத்தமபாளையம் நகரில் வடக்குத்தெரு, மெயின் பஜார் ஆகிய இடங்களில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களால் தடுமாறி விழுகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்