வேகத்தடை வேண்டும்

Update: 2024-04-21 10:22 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கைகாட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். வேகமாக சென்று வரும் வாகனங்களால் அங்கு அடிக்கடி சிறு, சிறு விபத்துகளும் அரேங்கேறி வருகிறது. எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்