வேகத்தடையால் விபத்து

Update: 2024-04-14 17:02 GMT
தியாகதுருகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் சந்தைமேடு பகுதியில் உள்ள வளைவில் 2 இடங்களில் விபத்துகளை தடுக்கவும், வாகன ஓட்டிகள் சீரான வேகத்தில் செல்லவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த வேகத்தடைகள் வாகன ஓட்டிகளுக்கு எளிதாக தெரியும் வகையில் அதில் வெள்ளை வர்ணம் பூசவில்லை. இதனால் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த வேகத்தடையில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க வேகத்தடையில் வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்