மயான சாலை வேண்டும்

Update: 2024-04-07 11:49 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள தளவாய் வடக்கு சிலுப்பனூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதற்காக இப்பகுதியில் மயானம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த மயானத்திற்கு சாலை வசதி இல்லாமல் உள்ளதால், மழை பெய்யும் போது இப்பகுதியில் உயிர் இழப்பவர்களின் உடல்களை இந்த மயானத்திற்கு கொண்டு செல்ல பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்