சாலை நடுவே மின்கம்பம்

Update: 2024-04-07 10:43 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள திருவாரூர் மெயின்ரோட்டில் ஆலிவலம் போலீஸ் நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் சாலையின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மின்கம்பம் சாலை நடுவே உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் மின்கம்பத்தின் மீது மோதி விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. விபத்துகளை தடுக்க தற்காலிகமாக மின்கம்பம் அருகே இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை நடுவே அமைந்துள்ள மின்கம்பத்தை அகற்றி சாலையோரத்தில் வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்