சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-31 11:48 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி கிராமத்துக்கு உட்பட்ட பாப்பாங்குளத்தில் இருந்து சிவன் கோவில் செல்லும் சாலை கடந்தசில மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்