வேகத்தடையால் விபத்து

Update: 2024-03-24 17:58 GMT
திருவந்திபுரம்-பாலூர் செல்லும் பிரதான சாலையில் சுந்தரர்பாடி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வளைவில் விபத்துகளை தவிர்ப்பதற்காக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வேகத்தடை சாதாரண அளவை விட பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வேகத்தடையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க வேகத்தடையின் உயரத்தை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்