விரைந்து முடிக்க வேண்டிய சாலை பணி

Update: 2024-03-10 17:59 GMT

நாமக்கல்லில் இருந்து திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 2 கி.மீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை என்பதால், சாலை பணிகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே துறையூர் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டு இருப்பதால், வாகன ஓட்டிகள் சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


மேலும் செய்திகள்