சாலை வசதி வேண்டும்

Update: 2024-03-10 11:57 GMT

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா விக்கிரபாண்டியம் பஞ்சாயத்து புளியஞ்சேரி ஆற்றங்கரையில் உரிய சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் கரடு, முரடான சாலையையும், மண்பாதையையும் பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதையில் மழைநீர் தேங்கி சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. அதுபோன்ற நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. வாகனங்களும் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பகுதியில் உரிய சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்