சாலை வளைவில் ஆளுயர கண்ணாடி தேவை

Update: 2024-03-10 11:57 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்துஅணைக்காடு செல்லும் சாலையில் ஆபத்தான வளைவு பகுதி உள்ளது. வாகன ஓட்டிகள் அந்த பகுதியை கடந்து செல்லும் நேரத்தில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதன்காரணமாக சாலை வளைவு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகளவில் விபத்திகள் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலை வளைவு பகுதியில் ஆளுயர கண்ணாடி வைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்