குண்டும், குழியுமான சாலை

Update: 2024-03-10 11:37 GMT

 திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டையில் இருந்து காருகுடி கிராமத்திற்கு செல்லும் தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் மேலும் முதியவர்கள் இந்த சாலையில் செல்லும்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்