சாலையோர புற்களால் விபத்து அபாயம்

Update: 2024-03-03 17:03 GMT
சின்னசேலத்தில் இருந்து நயினார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் வளைவில் இருபுறமும் ஆள் உயர அளவிற்கு கோரைப்புற்கள் அதிக அளவில் வளர்ந்து நிற்கின்றன. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனங்கள் சீராக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதோடு, விபத்துகள் நடைபெறும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சாலையை யொட்டி வளர்ந்துள்ள கோரைப்புற்களை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்