பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி

Update: 2024-03-03 17:02 GMT
தியாகதுருகம் அருகே தியாகை கிராமத்தில் இருந்து வேங்கைவாடி வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து அங்கு புதிதாக சாலை அமைக்க ஆங்காங்கே ஜல்லிகற்கள் கொட்டப்பட்டது. ஆனால் அதன்பிறகு அங்கு மேற்கொண்டு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலை பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்