குண்டும், குழியுமான சாலை

Update: 2024-03-03 11:45 GMT

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டையில் இருந்து காருகுடி கிராமத்திற்கு செல்லும் தார் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக ஜல்லி கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்