வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள்

Update: 2024-03-03 11:44 GMT

பெரம்பலூரில் இருந்து சிறுவாச்சூர், அயலூர், சாத்தனூர், கூத்தூர் வழியாக அரியலூர் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றது. அதே வேளையில் இந்த சாலையில் அதிக வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் சாலையில் இருக்கின்ற அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. இதனால் அச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆகையால் வேகத்தடைகளில் வெள்ளை வர்ண கோடுகள் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்