சாலையோர ஆக்கிரமிப்பு

Update: 2024-03-03 10:50 GMT

திருப்பூரில் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கிடையில் சாலையோர கடைக்காரர்கள் சாலையை குறைந்த பட்சம் 6 அடி வரை ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள். மற்ற இடங்களில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து விடுகிறார்கள். இதனால் பிற வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது. எனவே ச ாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குறிப்பாக திருப்பூர்-தாராபுரம் சாலை கே.செட்டிப்பாளையம் வளைவு, திருப்பூர் ஊத்துக்குளி சாலை மேம்பாலம் ரவுண்டானா பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது அவற்றை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்