சாலை சீரமைக்க வேண்டும்

Update: 2024-02-25 16:54 GMT

நாமக்கல்-திருச்சி சாலை பொன்விழா நகர் வளைவில் இருந்து உள்ளே செல்வதற்கு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையை மாருதிநகர் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெட்ரோல் விற்பனை நிலைய பஸ் நிறுத்தம் அருகில் சாலை விரிவாக்க பணி நடந்து வருவதால், திருச்சி சாலையில் இருந்து என்.கொசவம்பட்டி செல்ல அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சாலை மிகவும் பழுதாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்