சாலையோர பள்ளம் மூடப்படுமா?

Update: 2024-02-18 17:10 GMT
மேல்மலையனூர் அருகே கீழ்செவலாம்பாடி- மேல்காரணி இடையே புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த பணி முடிந்தபோது, சாலையோர பள்ளத்தை மூடி சரி செய்யாமல் அதிகாரிகள் விட்டு விட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையோர பள்ளத்தை மூடி சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்