குண்டும்,குழியுமான சாலை

Update: 2024-02-18 09:42 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன் கோட்டை கிராமத்தில் ஸ்ரீமான்நாடிமுத்து சாலை அமைந்துள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. குண்டும்,குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்