வேகத்தடைக்கு வர்ணம் பூச கோரிக்கை

Update: 2024-02-11 17:14 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் -தொளசம்பட்டி செல்லும் வழியில் அமரகுந்தி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தம் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் 2 வேகத்தடைகள் உள்ளன. இந்த வேத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவில் போதுமான வெளிச்சம் இல்லாததால் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த வேகத்தடைகளில் வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்