சாலை, தெருவிளக்கு அமைக்கப்படுமா?

Update: 2024-02-04 17:33 GMT

நாமக்கல் போதுபட்டியில் இருந்து நல்லிபாளையம் செல்லும் வழியில் அமைந்துள்ளது யாழ்நகர். இங்கு பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் அருகில் உள்ள தனியார் பள்ளி உள்ளது. இங்கு சாலை வசதியும், தெருவிளக்கு வசதியும் இல்லாததால் இரவு நேரத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாழ்நகரில் சாலை மற்றும் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்