வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-02-04 17:22 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் பேரூராட்சியில் ஆத்தூர், துறையூர், சோபனபுரம், கோட்டபாளையம் ஆகிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பெரிய அளவிலான விபத்துகள் நடக்கும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்