அடிக்கடி விபத்துகள்

Update: 2024-01-28 14:23 GMT

கோபிசெட்டிபாளையத்தில் ஈரோடு வளைவு முதல் சத்தியமங்கலம் செல்லும் வளைவு வரை இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரோட்டின் நாலாபுறமும் கல்லும், மண்ணும் கொட்டப்பட்டுள்ளது. மேலும் எச்சரிக்கை பலகை எதுவும் இல்லாமல் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்