சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-01-28 14:01 GMT

தஞ்சை இ.பி.காலனியில் இருந்து மாதாக்கோட்டை மற்றும் புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. சாலையில் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்