அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள்

Update: 2024-01-28 12:19 GMT

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம், மேய்க்கல் நாயக்கன்பட்டி கிராமத்தில் திருச்சி-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சில வாலிபர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் உலா வருகின்றனர். இதனால் கடைவீதிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கடும் சிரமம் மற்றும் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் அந்த வாலிபர்கள் அறிவிக்கப்படாத மோட்டார் சைக்கிள் பந்தயம் போலவே போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்