பள்ளம் சீரமைப்பு

Update: 2024-01-28 06:40 GMT

பள்ளம் சீரமைப்பு

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தே‌சிய நெடுஞ்சாலை குழித்துறை சந்திப்பில் சாலையின் அடியில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டது. பின்னர், அந்த குழாய் உடைப்பை சீரமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. ஆனால், அதன்பிறகு அந்த இடத்தில் பள்ளத்தை மூடி முறையாக சாலையை சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட ‘தினத்தந்தி’-க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

- ஐசக் கிங்ஸ்லின், குழித்துறை.

மேலும் செய்திகள்