விபத்து அபாயம்

Update: 2024-01-21 08:54 GMT

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தே‌சிய நெடுஞ்சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் குழித்துறை சந்திப்பு பகுதியில் சாலையின் அடியில் பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பள்ளம் தோண்டப்பட்டு சரி செய்யப்பட்டது. ஆனால், இதற்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்