குண்டும்,குழியுமான சாலை

Update: 2024-01-14 10:02 GMT

திருவாரூர் மாவட்டம் தண்டலை ஊராட்சி தியானபுரம் சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக உள்ளது. சாலை நடுவே ஆங்காங்கே பள்ளங்களும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இவற்றால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்