சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2024-01-14 09:55 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் கருப்பமுதலியார்கோட்டை கிராமம் தெற்கு தெருவில் சாலை உள்ளது. இந்த சாலையின் ஒரு பகுதி பள்ளமாக காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் போது சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிந்தோட வழியில்லாமல் வாரகணக்கில் அப்படியே சாலையில் தேங்கி இருக்கிறது. தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் நீரில் கனரக வாகனங்களில் செல்லும் போது சாலையோரத்தில் நடந்து செல்பவர்கள் மீது நீர் தெறிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்