சாலையை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

Update: 2024-01-07 15:28 GMT
தியாகதுருகத்தில் இருந்து சிறுநாகலூர் செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூர சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் உள்ளன. இந்த கருவேல மரங்கள் சாலையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் அந்த சாலை குறுகி குகை போல் மாறிவிட்டது. இந்த சாலையில் பஸ், லாரி மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்லும்போது வாகனங்களுக்கு சேதம் ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோரின் முகத்தை கருவேல மரங்கள் பதம் பார்க்கிறது. எனவே கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்