பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-01-07 11:48 GMT


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு ராஜீவ்புறத்தில் இடுகாடு அருகே பாலம் மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் தேங்கும் மழை நீர் வடிவதற்கு போதிய இட வசதி இல்லை. பாலத்தில் செடிகள் வளர்ந்து ஆபத்தான முறையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை சீரமைத்தும், மழை நீர் வடிவதற்கு வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்