சாலை வசதி அவசியம்

Update: 2023-12-31 18:07 GMT
பண்ருட்டி தாலுகா சாத்திப்பட்டு ஊராட்சி பாலப்பட்டு காலனியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளதால், பொதுமக்கள் தினசரி அல்லல்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்