சேதமடைந்த சாலை

Update: 2023-12-24 17:06 GMT
கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் இருந்து கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி வரை தார் சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்