குண்டும்,குழியுமான சாலை

Update: 2023-12-24 10:33 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் குளம் போல் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழைநீர் தேங்குவதால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளும் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. இரவு நேரங்களில் பள்ளங்களில் நிலைதடுமாறி விழுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, கும்பகோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்