சேதமடைந்த நடைபாதை

Update: 2023-12-24 10:33 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் பெரிய தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கு எதிரே பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. நடைபாதையில் உள்ள தளக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக இருக்கிறது. இதன்காரணமாக நடைபாதையில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள நடைபாதையை சீரமைக்கவும், முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்