சேறும்,சகதியுமான சாலை

Update: 2023-12-24 10:32 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சோழபுரம் பகுதி குமரன்குடி கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லை. பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்துகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மண்பாதை முழுவதும் சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. வாகனங்களும் சேற்றில் சி்க்கிக்கொள்கின்றனர். சேறும்,சகதியுமாக மாறிவிடும் பாதையினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்