மாணவர்கள் அவதி

Update: 2023-12-24 08:35 GMT

ஆற்றூரில் இருந்து அருமனை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் வில்லுண்ணிக்கோணம் அரசு உயர்நிலைப்பளளி அருகே குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்