சேதமடைந்த சாலை

Update: 2023-12-17 17:38 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முருகன் கோவில் வடக்கு மாட வீதியில் தண்ணீர் குழாய் பதிப்பதற்காக தோண்டி எடுக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் மீண்டும் சரியாக பதிக்கப்படாததால் தெரு முழுவதும் மேடு பள்ளமாக, சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைப்பார்களா?

மேலும் செய்திகள்