புவனகிரி தாலுகா பு.சித்தேரி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிட்டது. குறிப்பாக மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.