சாலை வசதி வேண்டும்

Update: 2023-12-10 14:00 GMT

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா கோட்டூர் ஒன்றியம் பாலையூர் கிராமத்தில் சுக்கான் தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதையில் மழைநீர் தேங்கி சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. மாணவ-மாணவிகளும் நடந்து செல்ல முடியாத சூழல் உருவாகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சாலை அமைத்திட நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்